close
Choose your channels

செங்கல்பட்டில் தெறி ஏன் ரிலீஸ் ஆகவில்லை : தாணு

Tuesday, April 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்த நிலையில் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் ஒருசில பிரச்சனைகள காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இதுகுறித்து விஜய் ரசிகர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் தாணு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

'தெறி' திரைப்படம் செங்கல்பட்டு ஏரியாவில் திரையிடாததற்கு உண்மையான காரணம் அந்த படத்தின் ரேட் சம்பந்தப்பட்ட காரணம் இல்லை என்றும், செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் அவர்கள் தனது மகனின் திருமணத்திற்கு ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுத்திருந்ததாகவும், ஆனால் திருமண நாளில் ரஜினி மற்றும் விஜய் இருவருமே வெளிநாட்டில் இருந்ததால் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும் கூறினார்.
இதை மனதில் வைத்துக்கொண்டு மற்ற திரையரங்கு உரிமையாளர்களுடன் இணைந்து பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் 'தெறி' பட விஷயத்தில் செயல்பட்டதாகவும் இவரது சூழ்ச்சியில் சிக்கிய மற்ற திரையரங்கு ஊழியர்கள் நல்ல வசூல் படம் ஒன்றை இழந்துவிட்டதாகவும், இதுபோன்ற பதவியில் இருப்பவர்கள் தங்கள் சொந்த வெறுப்பு காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவது சினிமா தொழிலுக்கு செய்யும் பெரிய துரோகம் என்றும் இனியும் மற்ற திரையரங்க உரிமையாளர்கள் இந்த சூழ்ச்சிக்கு இரையாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கலைப்புலி எஸ்.தாணு கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment