செங்கல்பட்டில் தெறி ஏன் ரிலீஸ் ஆகவில்லை : தாணு

  • IndiaGlitz, [Tuesday,April 19 2016]
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்த நிலையில் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் ஒருசில பிரச்சனைகள காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இதுகுறித்து விஜய் ரசிகர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் தாணு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

'தெறி' திரைப்படம் செங்கல்பட்டு ஏரியாவில் திரையிடாததற்கு உண்மையான காரணம் அந்த படத்தின் ரேட் சம்பந்தப்பட்ட காரணம் இல்லை என்றும், செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் அவர்கள் தனது மகனின் திருமணத்திற்கு ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுத்திருந்ததாகவும், ஆனால் திருமண நாளில் ரஜினி மற்றும் விஜய் இருவருமே வெளிநாட்டில் இருந்ததால் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும் கூறினார்.
இதை மனதில் வைத்துக்கொண்டு மற்ற திரையரங்கு உரிமையாளர்களுடன் இணைந்து பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் 'தெறி' பட விஷயத்தில் செயல்பட்டதாகவும் இவரது சூழ்ச்சியில் சிக்கிய மற்ற திரையரங்கு ஊழியர்கள் நல்ல வசூல் படம் ஒன்றை இழந்துவிட்டதாகவும், இதுபோன்ற பதவியில் இருப்பவர்கள் தங்கள் சொந்த வெறுப்பு காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவது சினிமா தொழிலுக்கு செய்யும் பெரிய துரோகம் என்றும் இனியும் மற்ற திரையரங்க உரிமையாளர்கள் இந்த சூழ்ச்சிக்கு இரையாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கலைப்புலி எஸ்.தாணு கேட்டுக்கொண்டுள்ளார்.

More News

நட்சத்திர கிரிக்கெட் போட்டியால் கிடைத்த தொகை எவ்வளவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்ட கடந்த ஞாயிறு அன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது...

'தெறி'யின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இயக்குனர் அமீர் அளித்த விளக்கம்

இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி விநியோகிஸ்தர்கள்...

கமல் இல்லை என்றால் 'முள்ளும் மலரும்' இல்லை. மகேந்திரன்

விக்ரம்பிரபு நடித்த 'வாஹா' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல் பாடல்களை வெளியிட அதை இயக்குனர்...

நயன்தாரா படத்தின் டைட்டிலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நயன்தாரா நடித்த முதல் பேய்ப்படமான 'மாயா' திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் மீண்டும்...

'த்ரிஷாவின் 'நாயகி' ஆடியோ ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் முடிசூடா நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா...