நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு நன்றி கூறிய தயாரிப்பாளர்கள் சங்கம்

  • IndiaGlitz, [Sunday,June 17 2018]

நடிகைகள் நயன்தாரா, குஷ்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட சில நட்சத்திரங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி கூறியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

கடந்த காலங்களில் திரை உலகில் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிகளில் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், சமீப காலங்களில் அது வியாபார நோக்கத்தில் நடத்தபடுவதால் அந்த பயனை நடிகர் நடிகைகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்க சிறப்பு கூட்டத்தில் இது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.

அன்று எடுத்த முடிவில் இனிமேல் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பொருளாதாரமாக பயன்படும் வகையிலோ, அல்லது தயாரிப்பாளர் சங்கம் ,நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடையாக தருபவர்கள் நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது . இதற்ககு பின் நடந்த விழாக்களான கலர்ஸ் டிவி , விஜய் டிவி , கலாட்டா டாட் காம் விருது விழாக்களில் இந்த நடைமுறையில் பணம் பெறப்பெற்று அறக்கட்டளையின் செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது .இதன் தொடர்ச்சியாக ஹைதராபாதில் பிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த நடைமுறையை அந்த விழா நடத்துபவர்களிடம் எடுத்து கூறியும் இன்றுவரை ஒத்துழைப்பு தராததினால் , இதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகளிடம் வேண்டுகோள் வைத்தோம்

எங்கள் வேண்டுகோளை ஏற்று கொண்டு அந்த விருது விழாவினை தவிர்த்த செல்வி .நயன்தாரா , திருமதி.குஷ்புசுந்தர் , திரு.விஜய்சேதுபதி, திரு கார்த்தி மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது . தங்களின் ஒத்துழைப்பால் பல ஏழை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவமுடியும் . இனி வரும் காலங்களில் மற்ற திரை கலைஞர்களும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் .

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

More News

அவரிடம் உள்ள ஒரே குறை இதுதான்: சந்தோஷ் நாராயணனின் காதல் மனைவி

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பொதுவாக வேலை செய்யும் இடத்தில் அமைதியாக இருப்பாராம். பாடல்கள் கம்போஸ் செய்யும்போதும் ரிகாடிங் செய்யும்போது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவராக இருப்பார்

ஆடம்பர காரில் சென்றவரை வெளுத்து வாங்கிய அனுஷ்கா ஷர்மா! ஏன் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சமீபத்தில் இத்தாலி நாட்டில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பரபரப்பை ஏற்படுத்திய 'கபாலி' வசனம்

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நேற்று முன் தினம் தொடங்கியது

கஸ்தூரி வீட்டை துடைப்பத்துடன் முற்றுகையிட்ட திருநங்கைகள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களின் வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பை அளித்த இரண்டு நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்லவுள்ளது.

நயன்தாராவால் சிபாரிசு செய்யப்பட்ட பிரபல காமெடி நடிகர்

நயன்தாரா, சமீபத்தில் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது 'மா', 'லட்சுமி' குறும்பட இயக்குனர் சர்ஜூன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.