நாளைய முழு அடைப்பில் திரையுலக சங்கங்கள் கலந்து கொள்ளுமா?

  • IndiaGlitz, [Thursday,September 15 2016]

காவிரி பிரச்சனையில் பெங்களூர் மற்றும் கர்நாடகாவில் உள்ள அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களின் உடைமைகளை சேதப்படுத்தியதை கண்டித்தும் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும், பல்வேறு சங்கங்களும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர்சங்கம், இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, பி.ஆர்.ஓ யூனியன் ஆகியவை இதுகுறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.