முதல்வர் ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்தது ஏன்? ரோபோ சங்கரின் மனைவி விளக்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,September 26 2023]

நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களாக பிரபலங்களை சந்தித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான என்றும் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக அல்ல என்றும் அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் அவர் தனது நெருங்கிய உறவினரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்திராஜாவின் திருமண பத்திரிகை வைப்பதற்காக தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களை குடும்பத்துடன் சந்தித்ததாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா ரோபோ சங்கர் விளக்கம் அளித்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னாள் பிரபலங்களுடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக தான் என்றும் திருமண அழைப்பு வைப்பதற்காக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் உடனான ரோபோசங்கர் குடும்பத்தின் சந்திப்பு நான்கு நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் இன்று தான் முதல்வர் அலுவலகத்தில் இருந்து புகைப்படங்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரோபோ ஷங்கர் மகளின் திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன் ரோபோ ஷங்கர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், முதல்வர் நலம் விசாரித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன் முதல்வரை குடும்பத்துடன் சந்தித்த ரோபோ சங்கர், சில நாட்களுக்கு முன்னர் அதிமுக மாநாட்டில் நிகழ்ச்சி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் வில்லி நடிகையா? என்ன ஆகப்போகுதோ..?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் வரும்போதுதான் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில் 7வது சீசனில் சர்ச்சைக்குரிய ஒரு சிலர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தன்னை கடவுளா நினைச்சுகிட்டு இருக்குற சைக்கோ.. 'இறைவன்' படத்தின் 2 நிமிட ஸ்னீக்பீக் வீடியோ..!

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சற்றுமுன் இந்த

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் நிறுவனம் இதுதான்.. பிரமாண்டமாக உருவாக்க திட்டம்..!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வந்துள்ள நிலையில் இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம்

ஜாலியான வெளிநாட்டு டூர்.. கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனின் வைரல் புகைப்படங்கள்..!

 கௌதம் கார்த்திக் தனது மனைவி மஞ்சிமா உடன் வெளிநாட்டு டூர் சென்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

வீடியோ எல்லாம் ஷேர் பண்ண முடியாது, நானே வர்றேன்.. விஜய் டிவி பாலாவின் பரந்த மனசு..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் பாலா ஏற்கனவே ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது உள்பட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.