பிரியங்கா மோகனுக்கு அடித்த சூப்பர் அதிர்ஷ்டம்.. யாருக்கு ஜோடியாகிறார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,April 19 2023]

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ படங்களில் நடித்த பிரியங்கா மோகன் தற்போது பிரபல நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதன்பின் சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ மற்றும் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் நடிப்பில் உருவாக ’OG’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகை பிரியங்கா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் தான் நடிக்க இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாகவும் ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் படம் விரைவில் ரசிகர்களுக்கு கிடைக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

More News

முதன்முறையாக கமல்ஹாசனுக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா? பிரபல இயக்குனரின் மாஸ் திட்டம்..!

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் தற்போது அவர் 'ஜவான்' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும்

விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் தான் என்னை ஆதரிக்க வேண்டும்: சீமான்

விஜய் அரசியலுக்கு வந்தால் அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் அவரை நான் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின்

ஒரே ஒரு வெற்றிப்படம் தான்.. நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை?

தென்னிந்திய திரை உலகில் ஒரே ஒரு வெற்றிப்படம் கொடுத்த நடிகை தற்போது நயன்தாரா, சமந்தாவை விட அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளன. 

பிரபல பாலிவுட் நடிகருடன் இங்கிலாந்தில் நடிகை சமந்தா.. செம்ம புகைப்படம் வைரல்..

பிரபல பாலிவுட் நடிகருடன் நடிகை சமந்தா இங்கிலாந்து நாட்டில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு சுமார் 8 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

ஷாலினி அஜித் சகோதரிக்கு பாராட்டு தெரிவித்த வெளிநாட்டினர்.. என்ன காரணம் தெரியுமா?

ஷாலினி அஜித்தின் சகோதரியின் படைப்பு திறமையை வெளிநாட்டினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.