முதல்முறையாக மகளின் முகத்தைக் காட்டிய நடிகை பிரியங்கா சோப்ரா… க்யூட் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,February 01 2023]

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தகவல் ரசிகர்களைக் கடும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவர் தன்னுடைய குழந்தையின் முகத்தை முதல் முறையாக வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு பாப் இசை பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே “க்வாண்டிகோ“ தொலைக்காட்சி தொடர் மூலம் ஹாலிவுட்டில் கால்பதித்திருந்த அவர் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவிலேயே தங்கி தொடர்ந்து, பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனக்கு வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை பிறந்த செய்தியை சமூகவலைத்தளங்கள் மூலமாகப் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் பலரும் பாராட்டை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது குழந்தை மால்டி மேரியின் புகைப்படத்தை வெளியிட்ட அவர், முகத்தை மட்டும் ஈமோஜி மூலம் மறைத்திருந்தார். மேலும் பல மாதங்களாகத் தனது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாகவும் தனக்கு மருத்துவ ரீதியாக பிரச்சனை இருந்ததால்தான் வாடகைத்தாய் மூலமாகக் குழந்தைப் பெற்றுக்கொண்டேன் எனவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவரான நிக் ஜோனாஸுடன் இணைந்து வாக் ஆஃப் ஃபேம் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் நிக்குடன் ஜோனாஸ் சகோதரர்கள் கெவின், ஜோவும் கலந்துகொண்டனர். அப்போது நடிகை பிரியங்கா தனது செல்ல மகளான மால்டி மேரியின் முகத்தை முதன்முதலாக வெளியுலகிற்குக் காட்டினார். இதையடுத்து மேடையில் பேசிய நிக் தனது செல்ல மகளைக் குறித்து ”Super Chill“ என்று கூறியவாறே உற்சாகம் அடைந்தார். இதுகுறித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

More News

செல்ல மகளுடன் டிரெக்கிங் சென்ற பிரபல கிரிக்கெட் வீரர்… வைரலாகும் புகைப்படங்கள்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராகக் கருதப்படும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர்

'எண்ணம் போல் வாழ்க்கை': தனுஷின் 'வாத்தி' செம அப்டேட்..!

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன்  பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும்

'தளபதி 67' படத்தில் இந்த ஹீரோவும் இல்லை.. உறுதி செய்த படக்குழுவினர்!

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்களும் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக

இதற்காகத்தான் காத்திருந்தோம்.. 'தளபதி 67' படத்தின் செம வீடியோ..!

தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தின் அப்டேட்டுகள் நேற்று மாலை முதல் வெளியாகி வருகிறது என்பதும் இதன் காரணமாக 'தளபதி 67' ஹேஷ்டேக் நேற்று முதல்  டிரெண்ட் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே. 

'பையா 2' படத்தில் கார்த்தியும் இல்லை, தமன்னாவும் இல்லை.. லிங்குசாமி செம பிளான்..!

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான 'பையா' திரைப்படம் கலந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் கார்த்தி மற்றும் தமன்னா நடித்த இந்த படம் வசூலை வாரி குவித்தது