கண்ணாடிக்குள் அழகு தேவதை… பிரியங்கா அருள்மோகனின் வித்தியாசமான போட்டோஷுட்!

  • IndiaGlitz, [Monday,May 08 2023]

தமிழ் சினிமா ரசிகர்களிடையே க்யூட்டான சிரிப்பின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா அருள்மோகன் புதிய போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக அமைந்துள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் வலம்வருபவர் நடிகை பிரியங்கா அருள்மோகன். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டாக்டர்’, ‘டான்’ என்று இரு படங்களிலும் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இளம் ரசிகர்களிடம் வரபேற்பை பெற்றார். தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் கிராமத்து பெண் வேடத்திலும் பட்டையைக் கிளப்பியிருந்தார்.

தமிழில் தற்போது நடிகர் ஜெயம்ரவி மற்றும் தனுஷுடனும் தெலுங்கில் நானி போன்ற நடிகர்களுடன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகை பிரியங்கா அருள்மோகன் கண்ணாடிக்குள் தன்னைப் பார்ப்பது போன்று வித்தியமாசமாக போட்டோஷுட் எடுத்துள்ளார். அதிலும் பரந்த வயல்வெளி போன்றிருக்கும் இடத்தில் இந்தப் புகைப்படங்களை எடுத்திருப்பதால் பார்ப்பதற்கு இயற்கை அழகு சொட்டுவதைப் போன்றே இருக்கிறது.

வெள்ளை நிறத்தில் உடையணிந்து நடிகை பிரியங்கா அருள்மோகன் எடுத்துக்கொண்ட புதிய போட்டோஷுட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.