பிரியங்கா ரெட்டி கொலையில் குற்றவாளிகள் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்!

  • IndiaGlitz, [Friday,November 29 2019]

தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவருடைய உடல் ஐதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது

இந்த கொலையால் ஐதராபாத் மட்டுமின்றி இந்தியாவே பரபரப்புக்கு உள்ளானது. பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருப்பதாக மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன

இதனை அடுத்து தெலுங்கானா காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், லாரி டிரைவர் மற்றும் கிளீனர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது

இதனையடுத்து கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளியான முகமது பாஷா என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: டாக்டர் பிரியங்கா ரெட்டி தனது இருசக்கர வாகனம் பழுதாகி நின்ற நிலையில் அவருக்கு நாங்கள் நான்கு பேரும் உதவி செய்வதாக நடித்தோம். அப்போது அவர் எதிர்பாராத நேரத்தில் அவரை தூக்கி சென்று மறைவான இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தோம். பின்னர் அவர் அணிந்திருந்த துப்பட்டாவை கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்

இந்த கொலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக பிரியங்கா ரெட்டியின் உடலை லாரியில் போட்டு மேம்பாலம் வரை எடுத்துச் சென்று அங்கே தீ வைத்துக் கொளுத்தி விட்டோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முகமது பாஷா உள்பட 4 பேர் மீதும் கொலை வழக்கில் கைது செய்த போலீசார் அவர்களிடம் மேலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்