close
Choose your channels

அருவியில் ஆனந்தமாக குளிக்கும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை! வைரல் புகைப்படங்கள்

Friday, February 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகியுள்ள நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் அருவியில் ஆனந்தமாய் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டதை அடுத்து அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த ’மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியா பவானிசங்கர் அதன்பின்னர் ’கடைக்குட்டி சிங்கம்’ ’மான்ஸ்டார்’ ’மாபியா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, சிம்புவின் ‘பத்து தல’ உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதால் தமிழ் திரையுலகின் முன்னணி பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானிசங்கர் அவ்வப்போது கவர்ச்சியான அழகான புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும், அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவியும் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது அவர் அருவியில் ஆனந்தமாக குளிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு அட்டகாசமான கமென்ஸ்களும் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’இந்த அழகான உலகில் சலிப்படைவது என்பதற்கு நேரமே இல்லை’ என்று அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment