ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு சம்பவம் இருக்கு: ப்ரியா அட்லியின் பதிவால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Monday,August 26 2024]

ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிடப் போவதாக ப்ரியா அட்லி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொலைக்காட்சி நடிகையான ப்ரியா மோகன், அட்லீயை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் தெரிந்தது.

தற்போது அட்லியின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வரும் ப்ரியா அட்லி ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்து ஒரு வீடியோவையும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை யூகியுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளதை அடுத்து நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்ற.

இரண்டாவது குழந்தையா என்றும், புதிய மேக்கப் பொருள் பிசினஸ் ஆரம்பிக்க போகிறீர்களா என்றும், பிட்னஸ் சென்டர் ஆரம்பிக்க போகிறார் என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வரும் நிலையில் அவரது புதிய அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.