கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள்… எச்சரிக்கும் தமிழக அரசு!

  • IndiaGlitz, [Monday,June 07 2021]

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்த புகார்களை பதிவு செய்வதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அந்தப் புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

அதேபோல முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொரோனா சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தனியார் மருத்துவமனைகளுக்கும் உரிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே நிர்ணயித்த தொகையைத் தொகையை தவிர்த்து யாரும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மேலும் தற்போது அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனவும் வலியுறுத்தி உள்ளது.

More News

ஊழியர்கள் அலட்சியத்தால் கொரோனா நோயாளி பலி....!

கோவை மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் அலட்சியத்தால், கொரோனா நோயாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதிய காற்று வீசுகிறது, நன்றி சார்: முதல்வர் ஸ்டாலினுக்கு பிசி ஸ்ரீராம் பாராட்டு!

தமிழகத்தில் புதிய காற்று வீசுகிறது, நன்றி சார் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்

0.3 மில்லி செகண்டில் காதலில் விழுந்தேன்: அன்புக்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா மந்தனா!

கார்த்தி நடித்த 'சுல்தான்' திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் பிரபல நாயகி என்பதும் தற்போது அவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'தி பேமிலி மேன்-2' தொடரை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டா? அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சமந்தா, ப்ரியாமணி உள்பட பலர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'தி பேமிலி மேன்-2' என்ற வெப்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் இந்த

ஜெ. வழக்கின் முக்கிய அதிகாரி ஜி.சம்மந்தம் உயிரிழந்தார்....!

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்க&#