கொரோனா பீதியில் சுரங்கம் தோண்டி தப்பிக்க முயன்ற சிறை கைதிகள்!!!

  • IndiaGlitz, [Saturday,May 02 2020]

 

கொரோனா பரவல் உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் சிறை கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற பதட்டம் நிலவிவருகிறது. இந்நிலையில் சில நாடுகள், சிறு குற்றங்களை செய்து சிறைக்கு வந்தவர்களை விடுவித்து வருகிறது. மேலும் அவர்களை வீடுகளில் சென்று தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியிருக்கிறது.ஆனால் பெரும்பாலான நாடுகள் சிறை கைதிகளை விடுவிடுக்கும் நடிவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றன.

தற்போது, கொரோனா பரவல் அச்சத்தினால் கொலாம்பியாவின் சிறையொன்றில் கைதிகள் சுரங்கத்தைத் தோண்டி தப்பிக்க முயன்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொலாம்பியாவின் பல சிறைகளிலும் கைதிகள், பணியாளர்கள், காவலர்கள் எனப் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அரசு சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களை வெளியே அனுப்பும்படி கூறியிருந்தாலும் பெரும்பாலான சிறைகள் இன்னும் நிரம்பியே காணப்படுகின்றன.

கொலாம்பியாவின் வில்லாவிசென்ஸியோ எனும் இடத்தில் அமைந்துள்ள சிறையில் 314 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவர்களில் கைதிகள் மட்டுமல்லாது சமையல் காரர்கள், காவலர்கள் என அனைவருக்கும் நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பற்றிய அச்சத்தில் சிறைக் கைதிகள் உறைந்துள்ளனர். அங்குள்ள 7 சிறை கைதிகள் ஒருவரின் அறைக்குள் இருந்து தாங்களே தயாரித்த ஆயுதங்களை வைத்து ஒரு சுரங்கத்தை உண்டாக்கி தப்பிக்க முயன்றனர் என்றும் இந்த முயற்சியை அதிகாரிகள் முறியடித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த ஒரு சிறையில் மட்டும் மிக நெருக்கமான முறையில் 1700 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பதற்றத்தால் தற்போது கைதிகள் தங்களை விடுவிக்கும்படி போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அச்சிறையில் கடும் பதற்றம் நிலவிவருகிறது. முன்னதாக கொலம்பியாவின் மொடேலோ சிறையில் இதேபோன்று நடைபெற்ற கலவரத்தில் 20 கைதிகள் கொலலப்பட்டனர். கொலாம்பியாவின் பல சிறைகளிலும் இதே போன்ற பதற்றம் நிலவுவதால் அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

More News

வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வரும் நிலையில் கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களில் சமூக விலகலை கடைபிடிக்காததால்

பிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற நபர் திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது

அஜித் படத்தில் மீராமிதுன்: வெளிவராத தகவல்

தல அஜித் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு கோலிவுட் திரையுலகினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தல அஜித் குறித்த பிறந்த நாள் ஹேஷ்டேக் டுவிட்டரில் 11 மில்லியனுக்கும்

தமிழகத்தின் ஒரே ஒரு பச்சை மண்டலத்திலும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் அதாவது மே 3ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் நேற்று திடீரென மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது

பெற்றோரையும் டீச்சரையும் கைது செய்யுங்கள்: ஊரடங்கு நேரத்தில் சிறுவன் கொடுத்த புகார்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் தன்னை தன்னுடைய பெற்றோரும் ஆசிரியரும் டியூஷன் போக சொல்லி கட்டாயப்படுத்தியதாக 5 வயது சிறுவன்