'சிறகடிக்க ஆசை': திடீரென மீனாவை பேட்டி எடுக்க வந்த பத்திரிகையாளர்கள்.. முத்து அதிர்ச்சி..

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் திடீரென மீனாவை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க குவிந்ததை பார்த்து முத்து அதிர்ச்சி அடைந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ரவியின் மனைவி ஸ்ருதி மீது அவரை திருமணம் செய்ய இருந்தவர் ஆசிட் ஊற்ற முயற்சித்த போது மீனா அவரை காப்பாற்றுகிறார். இதனை அங்கிருந்த சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆக்கினர்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பத்திரிகையாளர்கள் மீனாவை பேட்டி எடுக்க குவிந்தனர். அப்போது முத்து சமாளித்து தன்னுடைய மனைவி ஒரு வீரமான பெண் தான் என்று கூறுகிறார்

முன்னதாக உறுதியை மீனா, ஸ்ருதியை சந்தித்தபோது அவர் செய்த தவறை எடுத்து கூறுகிறார். காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் உங்களுக்கெல்லாம் விளையாட்டா? என கடுமையாக ஸ்ருதியை திட்டிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ருதியை மீனா சந்தித்ததாக முத்துவிடம் கூற, முத்து அவரை திட்டுகிறார். எதற்காக ஸ்ருதியை நீ சந்தித்தாய்? என்று கூறுகிறார். ஸ்ருதி நம்ம வீட்டு பெண் என்று மீனா கூற, அதற்கு முத்து ஆத்திரமடைகிறார்.

இந்த நிலையில் விஜயா தனது மருமகளை பார்க்க செல்லும் போது ஸ்ருதி அவர் முன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார். அதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார், ஸ்ருதியை தனது வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். ஆனால் முத்து இருக்கும் வீட்டிற்கு நான் எப்படி வருவேன்? எனக்கு அங்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேட்கிறார்.

இந்த நிலையில் மீனா, ஸ்ருதியின் அப்பா, அம்மாவை சந்தித்து ஸ்ருதிக்கு நீங்கள் பார்த்த மாப்பிள்ளையால் ஆபத்து என்றும் அவருடைய பாதுகாப்புக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் எனவே ஸ்ருதியை எங்கள் வீட்டுக்கு அவரை அனுப்பி வையுங்கள் என்றும் கோரிக்கை வருகிறார்.

இந்த நிலையில் ரவி மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் அண்ணாமலை வீட்டிற்கு செல்வார்களா? என அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரிய வரும்.