கொரோனா தடுப்பு பணியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மனைவி: வைரலாகும் புகைப்படம்

இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து நடந்து வரும் போரில் தன்னலம் கருதாது மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், தூய்மைப்பணியாளர்கள் என பலர் உயிரை பணயம் வைத்து இரவு பகலாய் பணிபுரிந்து வருகின்றனர். எனவே தான் வல்லரசு நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவி சவீதா கோவிந்த் அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் தையல் மிஷினில் ஏழை எளியோர்களுக்காக மாஸ்க்குகளை தைத்து கொண்டிருக்கின்றார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜனாதிபதியின் மனைவி தைத்து கொடுக்கும் மாஸ்குகள் டெல்லியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது. ஜனாதிபதி மனைவியின் இந்த சேவையை பலர் பாராட்டி வருகின்றனர்.

More News

சிக்னல் கிடைக்காததால் மரத்தில் ஏறி ஆன்லைனில் பாடம் நடத்திய ஆசிரியர்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோடிக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல், பாடம் படிக்க முடியாமல் சிக்கலில் உள்ளனர்.

புகைப்பிடிப்பவர்கள் ஏன் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா???

WHO வின் கருத்துப்படி, உலகம் முழுவதும் ஏற்படும் அதிக மரணத்திற்கு புகைப்பழக்கமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

காசநோய் தடுப்பூசி (பி.சி.ஜி) கொரோனாவில் இருந்து காப்பாற்றுமா???

பொது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காக போடப்படும் காசநோய் தடுப்பூசி பயன்பாடு, அதிகம் உள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது என ஒரு ஆய்வு வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு கேட்காமலே உதவி செய்த ரஜினிகாந்த்

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையுலகை சேர்ந்த பல தொழிலாளிகள், நலிந்த நடிகர்கள் உள்பட பலர் கஷ்டத்தில் இருக்கும் நிலையில் பெரிய நடிகர் நடிகைகள்

குழந்தைக்கு 'லாக்டவுன்' என பெயர் வைத்த பெற்றோர்கள்: குவியும் வாழ்த்துக்கள்

இந்தியாவில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் 'லாக்டவுன்' பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரிபுரா மாநிலத்தில் சஞ்சய் மற்றும் மஞ்சு என்ற தம்பதிக்கு குழந்தை ஒன்று பிறந்தது.