ஒருவழியாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட பிரேம்ஜி.. அவரே செய்த பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,January 02 2024]

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் 44 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாத நிலையில் இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடக்கும் என தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மகன்களின் ஒருவரான பிரேம்ஜி அமரனுக்கு தற்போது 44 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் முடிக்க பெண் பார்த்ததாக அவரது குடும்பத்தினர் கூறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது தாயார் மறைவு காரணமாக பெண் பார்க்கும் படலம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு பிரேம்ஜி அமரன் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு தனக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவரது பதிவை ரசிகர்கள் நம்பாமல் இதையேதான் ஐந்து வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர். 44 வயதாகும் பிரேம்ஜி அமரனுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தளபதி 69' படத்தில் இந்த மூன்று பிரபலங்களா? வேற லெவல் தகவல்கள்..!

தளபதி விஜய் நடித்து வரும் 68 வது திரைப்படமான 'GOAT' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 69வது  திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது.

தளபதி விஜய்யுடன் முதல் முறையாக இணையும் பிரபல பாடலாசிரியர்.. தெறிக்க வைக்கும் வரிகளா?

தளபதி விஜய் நடித்து வரும் 'GOAT' திரைப்படத்தில் முதன் முதலாக பிரபல பாடலாசிரியர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியே வந்த பின்னும் தொடரும் மாயா கேங் நட்பு.. ரெட் கார்டு பிரண்ட்ஸ் என நெட்டிசன்கள் விமர்சனம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு கேங்குகளாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வருவதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டிய பின்னரும் குழுவாக தான் தற்போதும் விளையாடி வருகின்றனர்

'சூர்யா 43' படத்தின் பணி தொடக்கம்.. முதலில் இணைந்தவர் இவர்தான்..! வைரல் புகைப்படம்..!

சூர்யா நடிக்க இருக்கும் 43 வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

ஒரு விஜய் அல்ல, ஓராயிரம் விஜய் வந்தாலும்.. நடிகர் ரஞ்சித் பேட்டி..!

நாட்டை காப்பாற்றுவதற்காக ஒரு விஜய் அல்ல ஓராயிரம் விஜய் வந்தாலும் நான் வரவேற்பேன் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.