2ஆம் பாகமாக உருவாகும் பிரசன்னாவின் வெற்றிப்படம்

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

பிரசன்னா, லைலா நடிப்பில் பிரியா இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'கண்ட நாள் முதல்'. பிரசன்னா, லைலா, கார்த்திக் குமார் என முக்கோண காதல் கதையான இந்த படம் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகளுடன் அமைந்து நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரசன்னா, லைலா, இயக்குனர் பிரியா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் மீண்டும் சந்தித்து தாங்கள் பணிபுரிந்த 'கண்ட நாள் முதல்' படம் குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும், அதன்பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோலிவுட் திரையுலகில் தற்போது ரஜினி, கமல் படங்கள் முதல் சந்தானம் படம் வரை பல இரண்டாம் பாக படங்கள் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் 'கண்ட நாள் முதல்' படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அது பிரசன்னாவின் முதல் இரண்டாம் பாக படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று முதல் அடுத்த கட்டத்திற்கு செல்லும் தனுஷின் 'அசுரன்'

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ!

சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் சிம்புவின் தீவிர ரசிகர்களை மட்டும் திருப்தி செய்த நிலையில் அவருடைய அடுத்த படமான 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

சூர்யாவின் 'என்.ஜி.கே' ரன்னிங் டைம் குறித்த தகவல்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட மற்ற தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில்

செளந்தர்யா திருமணத்தை அடுத்து ரஜினி வெளியிட்ட அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் செளந்தர்யாவின் திருமணம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

காமெடி நடிகர் கருணாஸ் காட்டிய விஸ்வாசம்

காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடந்த சில வருடங்களில் அணிகள் மாறி மாறி ஆதரவை தந்து கொண்டிருந்தார்.