பிரபல நடிகரின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை திருட்டு

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

சென்னையில் நேற்று வளசரவாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றின் லாக்கர் உடைக்கப்பட்டு லட்சக்கணக்கான மதிப்புள்ள பணம், நகை கொள்ளை போன அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத நிலையில் இன்று பிரபல நடிகர் ஒருவரின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி. இவருடைய சகோதரர் நாகராஜ் என்பவர் சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். கிரகலட்சுமிக்கு என தனி அறை நாகராஜ் வீட்டின் எதிரே உள்ளது. தற்போது அடையாறு பகுதியில் வசித்து வந்தாலும் அவருடைய பணம், நகை ஆகியவை நாகராஜின் அறைக்கு எதிரே உள்ள அறையில் தான் இருந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் நாகராஜின் வீட்டில் நுழைந்து அவரது வீட்டிலும், கிரகலட்சுமியின் அறையிலும் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கிரகலட்சுமியின் 150 சவரன் நகையும், நாகராஜின் 20 சவரன் நகையும் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 170 சவரன் நகைகளை திருடிய கொள்ளையனுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

More News

விவசாயி ஆகவே மாறிவிட்ட கார்த்தி

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தி, ஒரு விவசாயி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தினகரனின் குக்கர் சின்னத்திற்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்

டிடிவி தினகரன், சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளையும் தோற்கடித்தார்

புலம்புவதை விட்டு விட்டு ஆம்பளையா இருக்க பழகு - கெளதம்மேனன்

'துருவங்கள் 16' என்ற படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கும் 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு நன்றி கூறிய 'பாகுபலி 'இயக்குனர்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்கள் உலகின் கவனத்தை தென்னிந்தியா பக்கம் திரும்ப வைத்தன

'மெர்சல்' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

'மெர்சல்' எங்கள் நிறுவனத்தின் பெருமைக்குரிய திரைப்படம். மேலும் தளபதி விஜய்யுடன் இணைந்து பணிபுரிந்ததை பெருமையாக கருதுகிறோம் என்று கூறியுள்ளனர்.