கொரோனா விவகாரம்: பிரகாஷ்ராஜ் செய்த பிரமாதமான செயல்

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளே ஏழை எளியவர்களின் வீடுகளில் அடுப்பு எரியாமல் பட்டினி கிடக்க ஆரம்பித்துவிட்டனர். பணக்காரர்கள் தங்கள் வீட்டை பூட்டி கொண்டு, இருக்கும் உணவை உண்டு, மகிழ்ச்சியாக குடும்பத்துடன் பொழுதை போக்கி கொண்டிருக்கும் நிலையில் ஏழை எளியவர்கள், அன்றாடம் காய்ச்சிகள், தினக்கூலி பெறுபவர்களின் நிலை பெரும் சிக்கலில் உள்ளது

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னால் இயன்ற உதவியை அவரிடம் வேலை பார்க்கும் அனைவருக்கும் செய்துள்ளார். தன்னுடைய பண்ணையில் வேலை பார்க்கும் அனைவருக்கும் மே மாதம் வரையிலான சம்பளத்தை அட்வான்சாக கொடுத்து விட்டதாகவும் மேலும் தான் நடித்துக்கொண்டிருக்கும் மூன்று திரைப்படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கும் அட்வான்ஸ் சம்பளத்தையும் அவர் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் இன்னும் தன்னால் முயன்ற உதவி செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஒவ்வொருவரும் தாங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் பணிபுரிவோருக்கு அட்வான்ஸாக பணம் கொடுத்து இந்த நேரத்தில் உதவ வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த கொரோனாவில் இருந்து அனைவரும் தப்பிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்

கொரானாவில் இருந்து மக்களின் உயிரை காப்பாற்றி, பசிக்கு மக்களின் உயிரை பலி கொடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் பிரகாஷ்ராஜின் இந்த பிரமாதமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்
 

More News

கொரோனா குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய குட் நியூஸ்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னொரு பக்கம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் அதிரடி நடவடிக்கையாலும்,

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா: 18 வயது இளைஞரும் ஒருவர்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில்

ரஷ்யா தீவுகளில் 7.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!! சிறிய சுனாமி அலைகள்!!!

இன்று காலை ரஷ்யாவின் குரில் தீவுகளில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

பெப்சி தொழிலாளர்களுக்கு 100 மூட்டை அரிசி கொடுத்த பிரபல நடிகை

கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரைப்பட படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்களான பெப்சி தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தில் இருப்பதாகவும் வருமானமின்றி

'தல' வீட்ல இருக்காரு, நீங்களும் வீட்ல இருங்க: திமுக எம்.எல்.ஏ வேண்டுகோள்

கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து, தங்களை தாங்களே வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வது