நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டி: பிரபல தமிழ் நடிகர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 01 2019]

தமிழ் திரையுலகில் இருந்து ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் அரசியலில் குதித்துள்ளனர். ரஜினிகாந்த் வரும் சட்டசபை தேர்தலை குறி வைத்து அரசியல் காய்களை நகர்த்தி வரும் நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராகிய பிரகாஷ்ராஜ், தான் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட பிரகாஷ்ராஜ், மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாகவும், போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த பிரகாஷ்ராஜ், அனேகமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'அடங்கமறு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய 'அடங்கமறு' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் திருவிழா படங்களில் ஒன்றாக பெரும் போட்டிகளுக்கு இடையே வெளிவந்து வெற்றி பெற்றது.

'சூர்யா 37' டைட்டிலில் ஆச்சரியம்

சூர்யா நடித்து வரும் 'சூர்யாவின் 37வது படத்தின் டைட்டில் இன்று அதிகாலை புத்தாண்டு பிறந்த பத்து நிமிடத்தில் அதாவது 12.10 மணிக்கு வெளியாகும் என வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

கவுசல்யாவின் கணவர் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்கள்: அதிர்ச்சி தகவல்

உடுமலையில் நடந்த ஆணவக்கொலையில் கணவர் சங்கரை பறிகொடுத்த கவுசல்யா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சக்தி என்ற பறை இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஒரு புரட்சிகரமான திருமணமாக கருதப்பட்டது.

முதல்முறையாக 3Dயில் உருவாகும் அடல்ட் காமெடி படத்தில் யோகிபாபு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் முதல்முறையாக 3D கேமிராவில் உருவாக்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்ற நிலையில்

கதறி அழுத சின்மயி: காரணம் என்ன?

பாடகி சின்மயி தமிழகத்தில் 'மீடூ' என்ற ஹேஷ்டேக்கை ஆரம்பித்து வைத்த நிலையில் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களின் எண்ணிக்கைக்கு சம அளவில் அவருடைய மீடூ குற்றச்சாட்டை எதிர்க்கவும் ஒரு கூட்டம் உள்ளது