மோகன்லாலுக்கு எதிராக வழக்கா? பிரகாஷ்ராஜ் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,July 24 2018]

மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால், சமீபத்தில் நடிகை ஒருவரை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்து கொள்ள சம்மதித்தார். மோகன்லாலின் இந்த முடிவை மலையாள திரையுலகினர் பலர் எதிர்த்தனர்.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி கேரலா மாநிலத் திரைப்பட விருது விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் மோகன்லால் கலந்து கொள்ள கூடாது என்று பல்வேறு தரப்பினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களும் ஒருவர் என கூறப்பட்டது

ஆனால் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த தகவலை தனது சமூகவலைத்தளத்தில் மறுத்துள்ளார். இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், மோகன்லாலுக்கு எதிராக தான் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், இந்த விருது வழங்கும் விழாவில் மோகன்லால் கலந்துகொள்ள தான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோகன்லால் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரும் இணைந்து மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டிற்குள் புதியதாக நுழையும் விஜய் பட நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது இருக்கும் போட்டியாளர்களில் யாரும் பார்வையாளர்களின் மனதை தொடாத நிலையில் பிக்பாஸ் ஸ்கிரிப்டில் புதிய போட்டியாளர்கள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி மறுப்பா? நிர்மலா சீதாராமன் டுவீட்டால் பரபரப்பு

தமிழக துணை முதல்வர் இன்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒருசில அமைச்சர்களை சந்திக்கவிருப்பதாக இன்று காலை செய்தி வெளிவந்தது.

விவசாயிகள் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி: வெற்றி விழாவில் அசத்திய 'கடைக்குட்டி சிங்கம்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபரை கலாய்த்த தமிழ் நடிகர்

சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ஒருசில தமிழ் நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். ஜல்லிக்கட்டு முதல் ஸ்டெர்லைட் வரை சமூக பிரச்சனைகளையும் திரையுலகினர்

சென்னையில் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலி

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.