பிரதீப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: கமல் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

  • IndiaGlitz, [Saturday,November 04 2023]

சற்றுமுன் வெளியான புரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் பிரதீப் மீது கமல்ஹாசனிடம் சரமாரியாக குற்றச்சாட்டு தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.

அசிங்கமான கெட்ட வார்த்தைகள் பேசுகிறார், பெண் போட்டியாளர் அரைஞாண் கயிறு குறித்து விமர்சனம் செய்கிறார், டோர் மூடாமல் டாய்லெட் போகிறார், எதிர்த்து கேட்டால் அப்படித்தான் பேசுவேன் என்று திமிராக பேசுகிறார் என கமல்ஹாசனிடம் ஜோவிகா, ரவீனா, பூர்ணிமா, விஷ்ணு, மணி சந்திரா, நிக்சன் உள்ளிட்டோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை அடுத்து கமல்ஹாசன் இதற்கு என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று கூறினார். இதனை அடுத்து பிரதீப்புக்கு ரெட் கார்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி பிரதீப் எவிக்சன் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதீப் நாமினேஷனில் இல்லை என்பதால் அவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட வாய்ப்பு இல்லை. இதனால் அவர் கமல்ஹாசன் கொடுத்த தீர்ப்பு காரணமாக வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரதீப் இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை போக போக தான் பார்க்க வேண்டும்.

More News

பிக்பாஸ் போட்டியாளருக்கு ரெட் கார்டு வழங்கப்படுகிறதா? கமல்ஹாசன் அதிரடி..!

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த பின்னர் விறுவிறுப்பு அதிகரித்து உள்ளது என்பதையும்

உள்ளே ஜெயிக்கிறது விளையாடற மாதிரி தெரியல.. பிக்பாஸ் கமல் சொல்வது யாரை?

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக தங்கள் ஆட்டத்தை விளையாடி வருகின்றனர். குறிப்பாக கடந்த

4 பிரபல நடிகர்களுக்கு கடைசி படமாகி போன 'இந்தியன் 2.. பெரும் சோகம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும்

பிரபல சென்னை தியேட்டர் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.. நகைகள் கைப்பற்றப்பட்டதா?

பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அபிராமி ராமநாதன்

வந்த முதல் வாரமே எவிக்சனா? இந்த வார எலிமினேஷன் குறித்த தகவல்..!

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த நிலையில் அதில் ஒருவர் இந்த வாரமே எலிமினேஷன் செய்யப்பட்டார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.