ஓடிடியில் ரிலீஸாகும் பிரபுதேவாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,November 10 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடியிருந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. இருப்பினும் சூர்யாவின் ஜெய்பீம், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் தான் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் பிரபுதேவாவின் அடுத்த படமான ’பொன்மாணிக்கவேல்’ என்ற திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபுதேவாவின் ’பொன்மாணிக்கவேல்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே முடிந்து ஒரு சில ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதூ. மேலும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா ஜோடியாக, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் மேனன், மகேந்திரன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இமான் இசையில் வெங்கடேஷ் ஒளிப்பதிவில் சிவாநந்தீஸ்வரர் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அபினய்க்கு நீ கைப்பாவையா? இசைவாணிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட நிரூப்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பொம்மை டாஸ்க் நடந்து வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கால் போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் சண்டை நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

புனித் ராஜ்குமார் மறைவுக்கு ரஜினிகாந்தின் நெகிழ்ச்சியான இரங்கல்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி காலமான நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புனித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து

தளபதி விஜய் மற்றும் சூர்யா திடீர் சந்திப்பா?

சன் நெட்வொர்க் அலுவலகத்தில் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தடுப்பூசியால் ஒரே இரவில் கோடீஸ்வரி ஆன பெண்மணி!

ஆஸ்திரேலியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் பெண்மணி ஒருவர் 7.4 கோடி ரூபாய் லாட்டரியை வென்றுள்ளார்.

நீச்சலுடையில் பிக்பாஸ் ஸ்ருதி: வைரல் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய ஸ்ருதி கடந்த ஞாயிறன்று வெளியேற்றப்பட்டார் என்பதும் அவர் மிகுந்த கனவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததாகவும், தான் இவ்வளவு சீக்கிரம்