விஜய்யின் 'தளபதி 64' படத்தில் பிரபுதேவா கனெக்சன்

  • IndiaGlitz, [Tuesday,December 10 2019]

விஜய், விஜய்சேதுபதி முதல்முறையாக இணைந்து நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் தினந்தோறும் பேஸ்புக் டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபுதேவாவின் சகோதரரும் நடன இயக்குனரும் நடிகருமான நாகேந்திர பிரசாந்த் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2004ஆம் ஆண்டு விஜய் நடித்த கில்லி படத்தில் நடித்து இருந்தார் என்பதும் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜய் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜய், விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் இன்னும் ஓரிரு நாளில் கர்நாடகா செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் ‘தளபதி 64’ படத்தில் விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

தோனி..தோனி என்று கத்திய ரசிகர்கள். விரக்தியை வெளிப்படுத்திய விராட்.

நேற்றைய போட்டியின் போது ரிஷப பந்த் கேட்சை விட்டதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி..தோனி என்று கத்தினார். இதனால் விரக்தியடைந்த கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடையே அமைதியாய்

2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி..!

2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி முடி சூட்டப்பட்டார்

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு, 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு. பலர் மாயம்.

நியூசிலாந்தில் உள்ள எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்துள்ளவும் போலீசார் தெரிவிக்கின்றனர்...

சுந்தர் பிச்சையால் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடி லாபம் அடைந்த கூகுள் நிறுவனர்கள்

சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்கள் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ

கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி! தொடரும் பெற்றோர்களின் அலட்சியம்

பெற்றோர்களின் அலட்சியத்தால் சுஜித் உள்பட ஒருசில குழந்தைகள் ஆழ்குழாய் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவங்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.