பிரபுதேவாவின் 2ஆம் பாக படத்தில் நிக்கி கல்ராணி

  • IndiaGlitz, [Monday,November 06 2017]

பிரபுதேவா, பிரபு, காயத்ரி ரகுராம், உள்ளிட்ட பலர் நடித்த சார்லி சாப்லின் திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஷக்தி சிதம்பரம், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகிகளாக நிக்கி கல்ராணி மற்றும் தான்யா நடிக்கவுள்ளனர்.

முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்கு கிரேசி மோகன் வசனம் எழுதவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 

More News

அமெரிக்க தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 27 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சர்ச் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதை அடுத்து கடந்த வாரம் முழுவதுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அவள், விழித்திரு படங்களின் ஓப்பனிங் வசூல் எப்படி?

கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் சித்தார்த்தின் 'அவள்' மற்றும் தன்ஷிகாவின் 'விழித்திரு' திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.

கனமழையிலும் கலெக்சனில் களைகட்டிய தளபதியின் 'மெர்சல்'

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.200 கோடிக்கும் வசூலை பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை: ரசிகர்களிடையே கமல் ஆவேச பேச்சு

தமிழக நலன்களுக்காக நான் என் ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். இங்குள்ள கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டமில்லை. தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை என்று நான் கருதுகிறேன்.