ஜூன் 8 முதல் மேலும் ரூ.100 கோடி வசூல் செய்ய காத்திருக்கும் 'பாகுபலி'

  • IndiaGlitz, [Tuesday,May 03 2016]

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான 'பாகுபலி' திரைப்படம் ஏற்கனவே ரூ.600 கோடி வசூல் செய்து தென்னிந்தியாவில் மிக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த படம் மேலும் ரூ.100 கோடியை வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆம் வரும் ஜூன் 8 முதல் இந்த படம் பிரெஞ்ச் மொழியில் பிரான்ஸ் நாட்டில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறும்போது, 'பாகுபலி பிரான்சில் வெளியாவதன் மூலம் மேலும் ரூ.100 கோடி வசூல் செய்ய காத்திருக்கின்றது' என்று கூறியுள்ளார்.
பிரெஞ்ச் மொழியின் பல திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ் மொழி படம் ஒன்று பிரான்ஸ் நாட்டில் ரிலீஸ் செய்யப்படுவது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.