சூர்யாவுக்கு நன்றி கூறிய பிரபாஸ்! ஏன் தெரியுமா? 

  • IndiaGlitz, [Tuesday,August 06 2019]

பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பணிகள் தாமதம் ஆனதால் இரண்டு வாரங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 30-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே ஆகஸ்ட் 30ஆம் தேதி சூர்யாவின் 'காப்பான்' உள்பட ஒரு சில தென்னிந்திய மொழிப் படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததால் 'சாஹோ' படக்குழுவினர் சூர்யாவின் 'காப்பான்' படக்குழு உள்பட ஒருசில படங்களில் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் படத்தை இரண்டு வாரங்கள் ரிலீஸ் தள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்தனர்

'சாஹோ' படக்குழுவினர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட 'காப்பான்' படக்குழுவினர் உள்பட ஒருசில படக் குழுவினர் தங்களது படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இதில் 'காப்பான்' செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதனனயடுத்து பிரபாஸ் உள்பட 'சாஹோ' படக்குழுவினர் சூர்யாவுக்கு தெரிவித்துள்ளனர்,

இதுகுறித்து பிரபாஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: எங்களின் வேண்டுகோளை ஏற்று ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த 'காப்பான்' படக்குழு உள்பட அனைத்து படக் குழுவினருக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள 'சாஹோ' திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

More News

'கோமாளி' சர்ச்சை காட்சியை ரஜினியே பாராட்டினார்: ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த சர்ச்சை காட்சி ஒன்றுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை

சரவணன் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சரவணன் திடீரென அதிரடியாக வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்களுக்கு மட்டுமன்றி பார்வையாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது

'நேர் கொண்ட பார்வை' முதல் காட்சி ஆரம்பம்: போனிகபூர் தகவல்

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை மறுநாள் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில்,

சரவணன் விவகாரம்: கதறி அழுத கவின் - சாண்டி

பிக் பாஸ் வீட்டில் சரவணனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் கவின் மற்றும் சாண்டி என்பது தெரிந்ததே. சேரன் விவகாரத்தின்போதே சரவணனுக்கு தான் இருவரும் ஆதரவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

சரவணனை திடீரென வெளியேற்றிய பிக்பாஸ் முடிவு சரியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று எவிக்சன் படலம் மற்றும் டாஸ்க் ஆகியவை ஜாலியாக சென்று கொண்டிருந்த நிலையில், நிகழ்ச்சியின் முடிவில் திடீரென சரவணன் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது