ஒரு வழியாக திருமண அறிவிப்பை வெளியிட்டாரா பிரபாஸ்? மணப்பெண் யார்?

  • IndiaGlitz, [Friday,May 17 2024]

நடிகர் பிரபாஸ் 44 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் செய்துள்ள ஒரு பதிவு அவரது திருமணம் குறித்து பதிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ’பாகுபலி’ ’பாகுபலி 2’ படங்களின் மூலம் உலக அளவில் பிரபலமானார் என்பதும் அடுத்தடுத்து அவர் பிரமாண்டமான படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. குறிப்பாக சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் 44 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் பிரபாஸ் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று அவரது ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் அனுஷ்கா ஷெட்டி உட்பட பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட போதிலும் அவர் தனது திருமணம் குறித்த எந்தவித அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’டார்லிங்ஸ்.. இறுதியாக மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவர் என் வாழ்க்கையில் நுழையுள்ளார், ஆர்வத்துடன் காத்திருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து ஏராளமான ரசிகர்கள் அவர் தனது திருமணம் குறித்து அறிவிப்பை தான் வெளியிட்டுள்ளார் என்றும் மணமகள் யார் என்பதை விரைவில் அறிவிப்பார் என்றும் கூறி வருகின்றனர்.

பிரபாஸின் இந்த பதிவு அவரது திருமணம் குறித்து அறிவிப்பா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சுசித்ரா முன்னாள் கணவர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார்.. என்ன காரணம்?

பாடகி சுசித்ரா சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்ததார் என்பதும், அந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார்

அரசியல் தான் முக்கியம்.. இந்திரா காந்தி படத்தை கிடப்பில் போட்ட கங்கனா ரனாவத்..!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த 'எமர்ஜென்சி' என்ற திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசியல் பணிகளில்

வெள்ளித்திரைக்கு வந்த 'சிறகடிக்க ஆசை' நடிகை..  டைட்டில் மற்றும் பூஜை புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் அண்ணாமலை - விஜயா,  முத்து - மீனா, மனோஜ் - ரோகிணி மற்றும் ரவி

மீண்டும் பாலிவுட் செல்லும் அனிருத்.. இன்னொரு ரூ.1000 கோடி வசூல் படமா?

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'ஜவான்' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல்

எம்ஜிஆர் படத்திற்கும் பாடல் எழுதிவிட்டேன்.. ஆனாலும் ஒரு மனக்குறை.. வைரமுத்து

கவியரசு வைரமுத்து, எம்ஜிஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லை என்ற கலைக்குறை தனக்கு இருந்ததாகவும் ஆனால் அந்த குறை தற்போது தொழில்நுட்ப மூலம் தீர்ந்துவிட்டது என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.