கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

  • IndiaGlitz, [Wednesday,January 29 2020]

 

கரீபியன் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கியூபா, ஜமைக்கா உள்ளிட்ட சில தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டது. கரீபியன் கடலில் நேற்று 7.7 ரிக்டர் அளவிலான மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மெக்சிகோவில் இருந்து ஃப்ளோரிடா வரையில் இந்த நிலநடுக்கம் உணரப் பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வணிகக் கட்டிடங்கள், வீடுகள் போன்றவை அதிர்வுகளால் குலுங்கியது. இதனால் அச்சமடைந்த பொது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். இரவு முழுவதும் சாலை வீதிகளிலேயே பயத்துடன் இருக்க வேண்டி இருந்தது.

கியூபா, ஜமைக்கா, கேமான் போன்ற தீவுகளில் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் கியூபாவை ஒட்டியுள்ள சில தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்தது. கடற்கரையை ஒட்டியுள்ள மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டது. ஃப்ளோரிடாவின் கட்டிடங்களில் வசிப்பவர்களை தங்களது இடங்களில் இருந்து வெகு தொலைவிற்கு செல்லுமாறு அந்நாட்டு பாதுகாப்பு துறை கேட்டுக் கொண்டது.

சுனாமி பாதிப்பு இல்லை

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (P.T.W.C) விடுத்த சுனாமி எச்சரிக்கை தற்போது திரும்ப பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 300 கி.மீ. (186 மைல்) தொலைவில் அமைந்துள்ள தீவுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும், அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் (P.T.W.C) முன்னதாகத் தெரிவித்தது.

இன்று காலை சர்வதேச சுனாமி ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் “சுனாமி அச்சுறுத்தல் இப்போது இல்லை” எனவும் ”மக்கள் அச்சப்பட வேண்டாம்” எனவும் கேட்டுக் கொள்ளப் பட்டது. சுனாமி காரணமாகக் கட்டிடங்களுக்கு சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டன. உயிர் சேதங்கள் எதுவும் இல்லை என்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளது. M7.7 அளவுள்ள இந்த நிலநடுக்கம் பக்க வாட்டில் ஏற்பட்டதால் மட்டுமே பாதிப்புகள் குறைவாக இருந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

More News

CAA-க்கு ஆதரவளித்த ஆளுநர் எங்களுக்கு வேண்டாம்.. கேரளா சட்ட பேரவையில் அமளி..!

கேரள சட்டப்பேரவையில் சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை விமர்சித்த ஆளுநர் ஆரிப் முகமது கானை குடியரசுத்தலைவர் திரும்ப பெற வேண்டும் என கேரள எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

“நாங்கள் இந்தியர்கள் அதுதான் எங்கள் மதம்” – பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கருத்து

இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இந்திய மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத் தளங்களின் மூலம் பகிர்ந்து கொண்டனர்.

திரைப்படம் ஆகிறது பொள்ளாச்சி விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் பிரபல நடிகர்

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் குறித்த தமிழ்ப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டாரா? பாலிவுட் சூப்பர் ஸ்டாரா? ரஜினி குறித்து குழம்பிய இயக்குனர் பியர் கிரில்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஆவணப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் இந்த படத்தை டிஸ்கவரி சேனலுக்காக பியர் கிரில்ஸ் என்ற

சீனாவில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை – வெளியுறவு செய்தி தொடர்பாளர் தகவல்

முன்னதாக சீனாவில் வுஹான் மாகாணத்தில் மட்டுமே கொரோனா ("novel" coronavirus) வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.