அரசியல் செய்யாமல் ஆட்சி செய்கிறீர்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் பாராட்டு!

அரசியல் செய்யாமல் ஆட்சி செய்கிறீர்கள் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பிரபல நடிகர் ஒருவர் பாராட்டு தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் என்பதும் அது முதல் தமிழகம் பல்வேறு வளர்ச்சி பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் அதிரடி அறிவிப்புகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது என்பதும் தமிழக முதல்வரின் ஆட்சியை ஒருசில எதிர்க்கட்சிகள் தலைவர்களே பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மற்றும் பவர்ஸ்டார் பவன் கல்யாண் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வரின் ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பதிவு செய்திருக்கும் டுவிட்டில் குறிப்பிட்டுள்ளதாவது: அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம் உங்கள் அரசின் செயல்பாடுகள் உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்

பவர்ஸ்டார் பவன்கல்யாண் அவர்களின் இந்த ட்வீட் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், அவரது ரசிகர்கள் இந்த டுவிட்டை இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி காலமானார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ் அவர்களின் மனைவி சற்று முன் காலமானதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

விஜய்யை சூப்பர் ஹீரோவாக்கிய அஜித் பட நடிகை!

தல அஜித் படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் தளபதி விஜய்யை சூப்பர் ஹீரோ என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

தந்தை மறைவுக்கு பின் நடிகை ரவீனா பதிவு செய்த நெகிழ்ச்சியான வீடியோ!

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகை ரவீனா ரவியின் தந்தை ரவீந்திரநாத் சில மணி நேரங்களுக்கு முன்னர் திடீரென காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் இதுதான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' மற்றும் விக்னேஷ் சிவனின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்பட 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும்