100 டன் மருந்து மாத்திரைகள் டெலிவரி: தபால் ஊழியர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Saturday,April 18 2020]

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை இருக்கும் என்பதால் அதுவரை அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் தனியார் கூரியர் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் இந்திய தபால் துறையின் சேவை தற்போது மிகப்பெரிய அளவில் உள்ளது. நாடு முழுவதும் மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவைகளை தபால் ஊழியர்கள் டெலிவரி செய்து வருகின்றனர். நாடு முழுவதும் சுமார் இரண்டு லட்சம் தபால் ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்து கொண்டு இருப்பதாக உள்துறை செயலாளர் புன்யா வத்சவா அவரகள் தெரிவித்துள்ளார்.

கடந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் 100 டன்கள் மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ பொருட்களை தபால் ஊழியர்கள் மருத்துவமனைக்கும் மெடிக்கல் கடைகளுக்கும் டெலிவரி செய்துள்ளார்கள் என்பதும், இதில் மருத்துவ உபகரணங்கள் மட்டுமின்றி கொரோனா பரிசோதனை செய்யும் கிட்கள், வெண்டிலேட்டர்கள் ஆகியவையும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் செய்து வரும் பணியை போலவே தபால் ஊழியர்களும் செய்து வரும் இந்த பணியும் பாராட்டுதலுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அஜித், விஜய்க்கு ஆபத்து இல்லை, ஆனால் அவமானம்: பிரபல நடிகை டுவீட்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மனித இனமே உச்சத்தில் உள்ளது. சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு

சிறையில் இருக்கும் ஏஞ்சலினா ஜோலி ரசிகைக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான சாஹர் தாபர் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஈரான் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

150 மில்லியன் டாலர்களை வழங்கி கொரோனா தடுப்பூசி ஆய்வுக்கு அழைப்பு விடுக்கும் பில் கேட்ஸின் அறக்கட்டளை!!!

உலகின் பெரிய பணக்காரராக இருந்துவரும் பில் கேட்ஸின் பில் & மெலிண்&#

கொரோனாவால் குணமானவரை ஊருக்குள் அனுமதிக்காத பொதுமக்கள்: புதிய தீண்டாமையா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உயிரிழந்த ஆந்திர டாக்டர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

தமிழகத்தில் இன்று மேலும் அதிகரித்த கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை சுகாதாரத்துறை தினமும் தெரிவித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக 50க்கும் குறைவாகவே கொரோனாவால்