குழந்தைகள் ஆபாச படவிவகாரம்: சென்னை இளைஞர் அதிரடி கைது!

குழந்தைகள் ஆபாசப் படத்தைப் பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர் என்பது தெரிந்ததே. திருச்சியை சேர்ந்த அல்போன்சா என்பவரும் சென்னையை சேர்ந்த இருவரும் ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் குழந்தைகள் ஆபாச படங்களை தனது மொபைல் போனில் டவுன்லோட் செய்து வைத்து இருந்த சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்ற 24 வயது இளைஞர் தனது மொபைல் போனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் ஆபாச படத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பார்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து உடனடியாக அந்த இளைஞரின் மொபைல் போனை சோதனை செய்தபோது, அவரது மொபைலில் குழந்தைகள் ஆபாசபடம் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனை அடுத்து அவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

LKG-க்கே தேர்வு நடக்கிறது.. சிறப்பு பயிற்சி கொடுங்கள்..! பொதுத் தேர்வு கேள்விக்கு செங்கோட்டையன் பதில்.

எல்கேஜிக்கே நுழைவுத் தேர்வு எனும்போது 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தக் கூடாதா? ஏழை மாணவர்களின் கல்வித் தரம் உயர பொதுத் தேர்வு அவசியம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க 8 வழிமுறைகள்-  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சந்தோஷமாக ரிப்பன் வெட்டி.. குத்து விளக்கேற்றி.. கரோனா வைரசுக்கு தனி வார்டு திறப்பு..! எங்கு தெரியுமா?!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 'கரோனா' வைரஸ் சிறப்பு வார்டு, கோலமிடப்பட்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கி திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கரோனா வைரஸை கட்டுப்படுத்த முதல் முயற்சி.. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் அசத்தல் ஆய்வு..!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஆய்வுக் கூட விஞ்ஞானிகள் (The Peter Doherty Institute for Infection and Immunity) இந்த புதிய கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கொரோனா வைரஸ் மாதிரியை உருவாக்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் வெளியிட்ட இளையராஜா பாடல்!

இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் இசையமைத்து வந்தாலும் வெகு அரிதாகவே மற்ற இசையமைப்பாளர்களின் படங்களில் பாடி வருகிறார்.