குழந்தைகள் ஆபாச படவிவகாரம்: சென்னை இளைஞர் அதிரடி கைது!
- IndiaGlitz, [Wednesday,January 29 2020]
குழந்தைகள் ஆபாசப் படத்தைப் பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர் என்பது தெரிந்ததே. திருச்சியை சேர்ந்த அல்போன்சா என்பவரும் சென்னையை சேர்ந்த இருவரும் ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குழந்தைகள் ஆபாச படங்களை தனது மொபைல் போனில் டவுன்லோட் செய்து வைத்து இருந்த சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்ற 24 வயது இளைஞர் தனது மொபைல் போனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் ஆபாச படத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பார்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடனடியாக அந்த இளைஞரின் மொபைல் போனை சோதனை செய்தபோது, அவரது மொபைலில் குழந்தைகள் ஆபாசபடம் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனை அடுத்து அவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.