கண், முகத்தில் காயம்… பிரபல நடிகையைத் தாக்கிய கணவர் கைது!

  • IndiaGlitz, [Tuesday,November 09 2021]

பாலிவுட் நடிகையும் மாடலுமான பூனம் பாண்டேவை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் அவரது கணவர் சாம் பாம்பே மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரபலமானவர் நடிகை பூனம் பாண்டே. இந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர், தயாரிப்பாளர், எடிட்டராக இருந்துவரும் சாம் பாம்பே என்பவரை காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். பின்னர் திருமணம் ஆன இரண்டே வாரத்தில் கணவர் தன்னை தாக்கியதாகவும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் சமாதானம் ஆன நிலையில் பின்னர் இணைந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கோவாவில் உள்ள சபோலி அணையில் ஆபாசமாக போட்டோஷுட் நடத்திய வழக்கில் நடிகை பூனம் பாண்டே கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் நடிகை பூனம் பாண்டே தற்போது கணவர் தன்னை தாக்கிவிட்டதாகக் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து சாம் பாம்பேவை மும்பை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

மேலும் நடிகை பூனம் பாண்டேவிற்கு கண், முகம், தலை போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

More News

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ரூ.50,000 இழப்பீடு… தமிழக அரசு விளக்கம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும்படி

இந்தப் பயணம் கடினமானது… புற்றுநோய் அனுபவத்தை பகிர்ந்த மனிஷா கொய்ராலா!

தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இயக்குநர் மணிரத்னத்தின்

எதற்கும் ஒரு எல்லையுண்டு… இந்திய அணியை வெளுத்து வாங்கிய கபில்தேவ்!

இந்தியா டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

வங்கக்கடலில் இன்றைய தினம் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாவதால் தமிழகத்தில் அதிக கனமழை.

மழலை மொழி இனிதே… தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நடிகை ஸ்ரேயா!

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண்.