சென்னையில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு: பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரல்!

தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்பட்டது

மூன்றாம் கட்டமாக சென்னையில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் மால் ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்து அப்பாவி மக்களைப் பணயக் கைதியாக வைத்திருப்பது போன்றும், தளபதி விஜய் சாகசங்கள் செய்து அவர்களை காப்பாற்றி தீவிரவாதிகளை அழிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட படப்பிடிப்பில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்ததால் நடிகை பூஜா ஹெக்டே மும்பை திரும்பியதாக தகவல் வெளிவந்துள்ளது., விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’தளபதி விஜய் அவர்களுடன் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் தற்போது மூன்றாம் கட்ட சென்னை படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் இதனையடுத்து தான் மும்பை செல்வதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருப்பதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

More News

11 ஆண்டு காதலித்த காதலியை கரம்பிடித்த 'வலிமை' நடிகர்: வைரல் புகைப்படங்கள்

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் 11 ஆண்டு காலமாக தான் காதலித்த பெண்ணை கரம் பிடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்:  இந்தியாவில் ரிலீஸ் எப்போது?

ஹாலிவுட் ஆக்சன் திரைப்படமான 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தின் 8 பாகங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 9 ஆவது பாகமும் சமீபத்தில் தயார் ஆனது என்பதும் இந்த படம் மே 19ஆம் தேதி

11ஆம் ஆண்டு திருமண நாளில் பிரகாஷ்ராஜின் நெகிழ்ச்சியான பதிவு!

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தனது 11ஆம் ஆண்டு திருமண நாள் குறித்து நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

மம்முட்டி-மோகன்லாலுக்கு துபாய் அரசு கொடுத்த கெளரவம்!

பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா கொடுத்து கௌரவித்துள்ளது

இறுதிச்சடங்கு செய்து 11 ஆண்டுகள் கழித்து உயிருடன் திரும்பி வந்த மனைவி: கணவர் இன்ப அதிர்ச்சி

இறந்து விட்டதாக கருதி இறுதிச்சடங்கு செய்யப்பட்ட பெண் உயிருடன் திரும்ப வந்தது அவரின் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்