close
Choose your channels

அதிகாலை 4 மணிக்கு எழுந்தால் கிடைப்பது என்ன? பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள்!

Saturday, September 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கடுமையாக உழைத்தால் ஒரு நாள் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வெளியான ’வைகுந்தபுரமுளு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் 5 சாக்ஸி விருதுகள் கிடைத்துள்ளன. இந்த படத்தின் நாயகனான அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராகவும், பூஜா ஹெக்டே சிறந்த நடிகையாகவும், த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் சிறந்த இயக்குனராகவும், சிறந்த படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருதை தமன் அவர்களும் பெற்றுள்ளனர்.

இதனை அடுத்து இந்த விருது வாங்கிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, விருதுடன் படுக்கையில் படுத்தவாறு போஸ் கொடுத்த இரண்டு புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களின் கேப்ஷனாக, ‘அதிகாலை 4 மணிக்கு எழுந்து கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக ஒருநாள் விருது கிடைக்கும்’ என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’, சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சார்யா’ பிரபாஸ் நடித்து வரும் ’ராதேஷ்யாம்’ உள்பட ஒருசில படங்களில் நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment