close
Choose your channels

பயங்கர விபத்தில் சிக்கிய 'பொன்னியின் செல்வன்' பாடகி.. என்ன ஆச்சு..?

Sunday, May 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பொன்னியின் செல்வன்’ உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடிய பாடகி சமீபத்தில் பயங்கர விபத்தில் சிக்கியதாகவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் பிழைத்ததாகவும் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் உட்பட பல திரைப்படங்களிலும் தனி ஆல்பங்களில் பாடியவர் பாடகி ரக்ஷிதா சுரேஷ்.

இவர் மலேசியா செல்வதற்கு விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தான் சென்ற காரில் ஏர்பேக் வசதி இருந்ததை அடுத்து அந்த காரில் சென்ற தான் உட்பட சக பயணிகள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் பிழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்

இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் தான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது தனது அதிர்ஷ்டமே என்றும் கடவுளுக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘காதோடு சொல்’ என்ற பாடலையும் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் கன்னட பதிப்பில் ஒரு பாடலையும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார். மேலும் ’வந்தா ராஜாவாதான் வருவேன்’, ’வெந்து தணிந்தது காடு’ உள்பட ஒருசில படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment