'பொன்னியின் செல்வன்' டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் டிரைலர் ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்பதும், இந்த படம் இந்திய திரையுலகில் வசூல் சாதனையை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சம்பந்தமான சில தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ’பொன்னியின் செல்வன்’ முதல் மற்றும் இரண்டாவது பாகம் ஆகியவற்றின் டிஜிட்டல் உரிமை ரூபாய் 125 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிட்டல் உரிமையை அடுத்து இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்திய திரையுலகில் இது மிகப்பெரிய ஆச்சரியம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 

More News

'எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கிங்க'.. ரசிகரின் கேள்வியால் கடுப்பான சீரியல் நடிகை ரேஷ்மா!

சீரியல் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோது ஒரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? என்ற கேள்வியை கேட்டதற்கு கடுப்பாகி,

'கோப்ரா' நிலைமை தெரிந்தும் 3 மணி நேர படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்: என்ன ஆகும்?

சமீபத்தில் வெளியான விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா' திரைப்படம் மூன்று மணி நேரம் என்ற நீண்ட ரன்னிங் டைம் கொண்ட படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி

கேம் செயலி மூலம் நூதன மோசடி: கோடிக்கணக்கில் பணத்தை கைப்பற்றிய அமலாகத்துறை!

கேம் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து ரூ.17 கோடி பணத்தை கைப்பற்றியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 

காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்: கமல்ஹாசனின் பிக்பாஸ் அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6வது சீசன் விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நெருப்பு மட்டும் தான் வேற ஒண்ணை அழிச்சிட்டு தான் வாழும்: அதர்வாவின் 'ட்ரிகர்' டிரைலர்!

நடிகர் அதர்வா நடித்த அடுத்த திரைப்படமான 'ட்ரிகர்' திரைப்படம் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.