close
Choose your channels

மீண்டும் தொடங்கும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு: பரபரப்பு தகவல் 

Monday, November 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நடைபெறவில்லை என்பது தெரிந்ததே. தற்போது படப்பிடிப்பு நடத்த மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்ததை அடுத்து மீண்டும் படப்பிடிப்பு இம்மாத மத்தியில் தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘பொன்னின் செல்வன்’ படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட்டுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இந்த செட்களில் நவம்பர் இரண்டாவது வாரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உண்மையில் இந்த படத்தை அவர் இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்பட பல நாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஒருசில நாடுகளின் அரசு கெடுபிடிகள் காரணமாக தற்போது செட் அமைத்து அதில் படமாக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இரண்டு பாகங்களாக வெளி வர உள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment