பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலையில் திடுக்கிடும் திருப்பம்

  • IndiaGlitz, [Monday,April 08 2019]

கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் நாட்டையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை கல்லூரி ஒன்றில் படித்து கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போனதால் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே அந்த மாணவி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கல்லூரி மாணவியின் செல்போனில் கிடைத்த தகவலின்படி அவருடைய உறவினர் சதீஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்தது

சிறு வயது முதலே கல்லூரி மாணவியை சதீஷ் காதலித்து வந்ததாகவும், ஆனால் அவருடைய பெற்றோர் சம்மதிக்காததால் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் கல்லூரி மாணவிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கவிருப்பதை அறிந்ததும் ஆத்திரத்தில் மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் சதீஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

சென்னை போட்டி முடிந்த பின்னர் 10 கிலோ குப்பை: சுரேஷ் ரெய்னாவின் டுவிட்

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ராகுல்காந்திக்கு எதிராக போட்டியிட்டவரின் வேட்புமனு நிராகரிப்பு!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே அமேதி தொகுதியில் போட்டியிடும் நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்து,

விஜயகாந்தை அடுத்து ரஜினியை சந்தித்த டி.ராஜேந்தர்!

பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தனது மகன் குறளரசன் திருமண பத்திரிகையை சமீபத்தில் விஜயகாந்திடம் அளித்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில்

பூஜையுடன் தொடங்கியது சூர்யாவின் அடுத்த படம்

சூர்யா நடித்த 'என்.ஜி.கே' மற்றும் 'காப்பான்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள 38வது படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது

ஸ்டெர்லைட் நகரத்திற்கு செல்லும் 'உறியடி 2' இயக்குனர்

விஜயகுமார் இயக்கி நடித்த 'உறியடி 2' திரைப்படம் நேற்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.