போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பிரபலங்களின் ரியாக்சன்

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

தூத்துகுடியில் இன்று பேட்டியளித்த ரஜினிகாந்த், போராட்டம் செய்யும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவதால் கலவரமாக வெடிக்கின்றது. மேலும் எதற்கெடுத்தாலும் போராட்டக்கூடாது. பிரச்சனைகளை தீர்க்கத்தான் நீதிமன்றம் உள்ளது என்று ரஜினிகாந்த் கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் பிரபலங்களின் ரியாக்சனை தற்போது பார்ப்போம்

தமிழிசை செளந்திரராஜன்: பொதுமக்களின் போராட்டத்தில்..சமூகவிரோதிகள் ஊடுறுவியதால்தான் வரம்புமீறி உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. ஆக போராட்டங்கள் எச்சரிக்கையோடு நடைபெற வேண்டும் என்ற நிலையை சமூக அக்கறையோடு எடுத்துச் சொன்ன ரஜினிகாந்த் கருத்தை வரவேற்கிறேன். உண்மை நிலையை விமர்சனங்களையும் மீறி எடுத்துச்சொல்வதே சரி

தமிமுன் அன்சாரி: போராட்டத்தை ரஜினி கொச்சைப்படுத்துகிறார்; மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

கி.வீரமணி: வன்முறையில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர் என ரஜினி கூறுவதே சமூக விரோத குற்றச்சாட்டு 

துரைமுருகன்: புதுப்பொண்ணு என்பதால் ரஜினி அப்படித்தான் பேசுவார்”

கே. பாலகிருஷ்ணன் (மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்): ரஜினியின் கருத்து ஸ்டெர்லைட் ஆலையின் குரல். தூத்துக்குடியில் போராடிய அனைவரும் சமூக விரோதிகளா? ரஜினி வேண்டுமானால் போராடாமல் யாருக்கும் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும்

டி.கே.எஸ் இளங்கோவன்: முதல்வர், பொன். ராதாகிருஷ்ணன், ரஜினிக்கு ஒரே இடத்தில் இருந்து உத்தரவு வருகிறது. உயிரிழந்த 13 பேரில் யார் சமூகவிரோதி என்பதை பொன். ராதாகிருஷ்ணனும், ரஜினியும் விளக்க வேண்டும்

இயக்குநர் அமீர்: தூத்துக்குடி சென்ற பிறகு முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார் ரஜினிகாந்த்

முத்தரசன்: ரஜினி போன்றவர்களுக்கு போராட்டம் என்றாலே பிடிக்காது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினியின் கருத்து உள்ளது. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிக்கு நன்றி 

More News

ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்: தூத்துகுடியில் ரஜினிகாந்த் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன். கருணாஸ்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும்வரை இனி திமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று திமுக நேற்று கூறிய நிலையில்

தமிழ்நாடே உங்களை நம்பிதான் உள்ளது. காயமடைந்த தூத்துகுடி நபர் உணர்ச்சிவசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றார் என்பது தெரிந்ததே.

ஜோதிகாவின் அடுத்தபடத்தின் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க செவந்த வானம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சுசீந்திரனின் அடுத்த விளையாட்டு இன்று முதல் ஆரம்பம்

தமிழ் திரையுலகில் விளையாட்டு சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான திரைப்படங்களான 'வெண்ணிலா கபடிக்குழு' மற்றும் 'ஜீவா' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்'