close
Choose your channels

ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு.. என்ன காரணம்..!

Monday, May 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட ஃபர்ஹானா திரைப்படத்தின் முக்கிய பிரபலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ஃபர்ஹானா திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது.

இந்த படத்திற்கு ஒரு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இந்த படம் எந்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் உருவாக்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இயக்குனர் அமீர் உட்பட பல திரை உலக பிரபலங்கள் இந்த படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இருப்பினும் இந்த படத்திற்கு ஒரு சில பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்பதும் ஒரு சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஃபர்ஹானா திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment