டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை
- IndiaGlitz, [Wednesday,March 14 2018]
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் ஒருசிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த நிலையில் மாணவிகளை டிரெக்கிங் அழைத்து சென்ற சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டரின் பாலவாக்கம் வீட்டில் இன்று திடீரென தேனி போலீசார் சோதனை செய்தனர். மேலும் பீட்டரின் அலுவலகத்திலும் தேனி மாவட்ட தனிப்படை காவல்துறையினர் சோதனை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.