சிம்புவை எதிர்த்து பாஜக போராட்டமா? திடீர் போலீஸ் பாதுகாப்பு

  • IndiaGlitz, [Saturday,November 11 2017]

சமீபத்தில் சிம்பு பண மதிப்பிழப்பு குறித்த பாடல் ஒன்றை வெளியிட்டார் என்பது அனைவரும் தெரிந்ததே. 'தட்றோம் தூக்றோம்' என்று தொடங்கும் இந்த பாடலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பொதுமக்களின் சிரமங்கள் கடுமையான வார்த்தைகளால் தோலுரிக்கப்பட்டிருந்தது.

கபிலன் வைரமுத்து எழுதிய இந்த பாடலில்

ஏழை வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்புப் பணமடா,
குருவிபோல சேர்த்த காசு கையில இல்லைடா
நாட்டை மாத்த வேணுமின்னு நீங்க நினைச்சா,  
கோட்டு போட்ட குண்டர்களின் சங்க பிடிங்கடா

போன்ற வரிகள் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி மிக வேகமாக பரவியதை அடுத்து சிம்புவுக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜகவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதனால் சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'மெர்சல்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய்க்கு தேசிய அளவில் புகழ் பெற்று கொடுத்த பாஜகவினர் அடுத்து சிம்புவையும் தேசிய அளவில் பிரபலப்படுத்த முயற்சி செய்கிறார்களா? என்ற கேள்வியே பலரது மத்தியில் எழுந்துள்ளது.

More News

பத்மாவதி' படத்திற்கு துபாயில் இருந்து நிதி வந்ததா? சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுக்கு படக்குழுவினர் பதில்

ரஜபுத்திர ராணி பத்மாவதி கேரக்டரில் தீபிகா படுகோனே நடித்துள்ள 'பத்மாவதி' திரைப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

அந்த குடும்பத்தில் நானும் ஒரு அங்கம்: மம்தாவுக்கு நன்றி கூறிய கமல்

கொல்கத்தாவில் நடைபெறும் 23வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்றார்.

அறம்' படத்தை இதற்காகத்தான் பார்த்தேன்: தொல்.திருமாவளவன் பேட்டி

அறம்' என்ற தலைப்பையும் இயக்குநர் கோபியையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதற்காகவே இந்த படத்தை பார்க்க வந்ததாக கூறிய திருமாவளவன் படம் குறித்து கூறியதாவது:

நயன்தாராவின் 'அறம்' படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி சமூக இணணயதளங்கள், விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் என முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

நயன்தாராவுக்கு 100க்கு 100 மார்க்: விக்னேஷ்சிவன் ஆச்சரியம்

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருவதால் நயன்தாரா, இயக்குனர் கோபிநயினார் உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.