இளைராஜாவும் வடிவேலுமே மாமருந்து: போலீஸ் அதிகாரியின் கலகலப்பான டுவீட்

போலீஸ் அதிகாரி என்றால் விரைப்பான சட்டையை போட்டு பணிபுரியலாம் ஆனால் எப்போதும் விரைப்பாக இருக்க வேண்டுமா? கடினமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க இசையும் நகைச்சுவையை உதவும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வடிவேலு குறித்த ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அனைத்து பிராண்டுகளின் விளம்பரங்களுக்கும் வடிவேலுவின் புகைப்படங்கள் பொருத்தமாக இருப்பது சுட்டி காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து நெல்லை மாவட்ட துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவர்கள் ’அட ஆமால்ல’ என்று பதிவு செய்துள்ளார். இதற்கு ஒரு ட்விட்டர் பயனாளி ’ஒரு போலீஸ் அதிகாரி இது மாதிரி போஸ்ட் போடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியிருந்தார்

அவருக்கு பதில் அளிக்கும் வகையில் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த அர்ஜுன் சரவணன் அவர்கள் கூறியதாவது: போலீஸ் அதிகாரி கஞ்சியை சட்டைக்கு போட்டு விரைப்பாக வேலை பாக்கனும். ஆனா ஆளே எப்பவும் விரைப்பாக இருக்கனும்னு எதிர்பார்த்தா எப்படிங்க? கடினமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க உதவுவதே நல்ல இசையும் நகைச்சுவையுமே! இளையராஜாவும் வடிவேலுமே மாமருந்து என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த டுவிட்டுக்கு கமெண்ட் அளித்த நெட்டிசன்கள் ‘வாழ்க்கையில் எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் இளையராஜாவின் இசையை கேட்டால் அல்லது வடிவேலுவின் நகைச்சுவை படங்களை பார்த்தால் உடனே சரியாகிவிடும்’ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இது உண்மையும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு நன்றி: ராம்கோபால் வர்மாவின் நாயகி

ஓடிடி பிளாட்பாரத்தில் மாதம் ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது 'த்ரில்லர்' என்ற த்ரில் மற்றும் கிளாமர் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படிக்கூட நடக்குமா??? எங்களுக்கு வரியப்போட்டு கொரோனாவிற்கு நிதியை எடுத்துக்கோங்க... வியப்பூட்டும் அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் காலத்தில் அனைத்து நாடுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றன

இந்த மாதிரி போக்கிரிகளை தண்டிக்க வேண்டும்: நடிகர் பிரசன்னா ஆவேசம்

கடந்த சில நாட்களாக கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து முருக பக்தர்கள் உள்பட இந்து அமைப்புகள் கடும் கண்டனம்

ராமர் நேபாளி, உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது: நேபாளம் பிரதமரின் சர்ச்சை கருத்து

ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி தற்போதுதான் சாதகமான தீர்ப்பைப் பெற்று உள்ளது.

கொரோனா முடிந்ததும் என் முதல் வேலை இதுதான்: அஞ்சலி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.