ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கண்டுபிடிப்பு: யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,June 19 2020]

நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவரது வீட்டை வெடிகுண்டு நிபுணர்களும், காவல்துறையினர்களும் முழுமையாக சோதனை செய்தனர்.

ஆனால் சோதனைக்கு பின் ரஜினி வீட்டில் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லை என்பது உறுதியானதை அடுத்து இந்த மர்ம தொலைபேசி அழைப்பு வதந்தி என்பது உறுதியானது. இதனை அடுத்து ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

More News

தமிழகத்தில் 2வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் நேற்று முதல்முறையாக கொரோனா பாதிப்பு 2000ஐ தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முகத்தை மட்டும் மறைத்து யாஷிகா கொடுத்த கவர்ச்சி போஸ்! நெட்டிசன்கள் விமர்சனம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக எந்தவித படப்பிடிப்பும் இல்லாத காரணத்தினால் திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி

சீன பொருட்களை தூக்கி போட்டு உடைக்கும் இந்தியர்கள்: யாருக்கு நஷ்டம்?

இந்தியா மற்றும் சீனா எல்லையில் சமீபத்தில் நடந்த தாக்குதலை அடுத்து இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததை அடுத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வந்துவிட்டது... கொரோனா வைரஸை கொல்லும் அதிநவீன முகக்கவசம்!!!

உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கின்றனர். ஆனால் இதுவரை தடுப்பூசி, சிகிச்சை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் பட வில்லை.

கௌதம் மேனனுடன் முதல்முறையாக இணையும் தேசிய விருது பெற்ற கலைஞர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கோலிவுட் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் இந்த ஊரடங்கு நேரத்திலும் பிஸியாக இருப்பவர் இயக்குனர் கௌதம் மேனன் மட்டுமே