சரத்குமார் மீது போலீஸ் புகார். நடிகர் சங்கம் அதிரடி

  • IndiaGlitz, [Thursday,March 03 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த சரத்குமார் சங்கத்தின் கணக்குகளை முழுமையாக ஒப்படைக்கவில்லை என்றும், விரைவில் அவர் கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதியதாக தேர்வான உறுப்பினர்கள் பலமுறை வேண்டுகோளும் எச்சரிக்கையும் விடுத்தனர். ஆயினும் சரத்குமார் தரப்பில் இருந்து எவ்வித ரியாக்ஷனும் இல்லாததால் தற்போது சரத்குமார் மீது காவல்துறையினரிடம் புதிய நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர் பூச்சிமுருகன் ஆகியோர் நேரில் சென்று சரத்குமார் மீது புகார் ஒன்றை அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் சரத்குமார் மீது விரைவில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சரத்குமார் தலைவர் பதவியில் இருந்தபோது எஸ்பிஐ சினிமாஸ் உடன் போட்ட ஒப்பந்தம் சமீபத்தில் புதிய உறுப்பினர்களால் அதிகார்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அல்போன்ஸ் புத்திரனின் அலட்சிய படைப்புதான் 'பிரேமம்' நடுவர் குழு தலைவரின் சர்ச்சை கருத்து

சமீபத்தில் கேரள அரசு திரைப்பட விருதுகளை அறிவித்திருந்த நிலையில் கேரளாவிலும், தமிழகத்திலும் சூப்பர் ஹிட் ஆன 'பிரேமம்' படத்திற்கு ஒரு விருதுகூட கிடைக்காமல்...

ஜீவா, ஆர்யா, விஜய்சேதுபதி வரிசையில் தற்போது சிம்பு

போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, தர்மதுரை, மனிதன் என இவ்வருடம் மட்டுமே நான்கு படங்களுக்கு ரஜினி பட டைட்டில்கள்...

சூர்யாவின் '24' மற்றும் S3 ரிலீஸ் தேதிகள்

சூர்யா நடித்த '24' படத்தின் டீசர் நாளை வெளிவரவுள்ளது. இந்த டீசரை வரவேற்க இணையதளங்களில் இப்போதே சூர்யாவின் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்...

கபாலியின் கேரக்டர்கள். இதுவரை வெளிவராத தகவல்கள்

'மெட்ராஸ்' இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி முடித்துள்ள 'கபாலி' படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்...

'24' பாடல் குறித்த முக்கிய தகவல்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள '24' படத்தின் டீசர் வரும் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த டீசரின் விமர்சனத்தை சற்று முன்னர் பார்த்தோம்...