சரத்குமார் மீது போலீஸ் புகார். நடிகர் சங்கம் அதிரடி

  • IndiaGlitz, [Thursday,March 03 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த சரத்குமார் சங்கத்தின் கணக்குகளை முழுமையாக ஒப்படைக்கவில்லை என்றும், விரைவில் அவர் கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதியதாக தேர்வான உறுப்பினர்கள் பலமுறை வேண்டுகோளும் எச்சரிக்கையும் விடுத்தனர். ஆயினும் சரத்குமார் தரப்பில் இருந்து எவ்வித ரியாக்ஷனும் இல்லாததால் தற்போது சரத்குமார் மீது காவல்துறையினரிடம் புதிய நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர் பூச்சிமுருகன் ஆகியோர் நேரில் சென்று சரத்குமார் மீது புகார் ஒன்றை அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் சரத்குமார் மீது விரைவில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சரத்குமார் தலைவர் பதவியில் இருந்தபோது எஸ்பிஐ சினிமாஸ் உடன் போட்ட ஒப்பந்தம் சமீபத்தில் புதிய உறுப்பினர்களால் அதிகார்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.