நடிகை கெளதமி அளித்த நில மோசடி புகாரில் திடீர் திருப்பம்.. கேரளாவில் அதிரடி நடவடிக்கை..!

  • IndiaGlitz, [Thursday,December 21 2023]

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களான அழகப்பன், அவரது மனைவி மாச்சியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் சதீஷ்குமார் உட்பட 6 பேரை கேரளாவில் உள்ள திருச்சூரில் வைத்து கைது செய்துள்ளனர்

கடந்த செப்டம்பர் மாதம் நடிகை கௌதமி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில மோசடி குறித்த புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல்வேறு இடங்களில் தனக்கு சொந்தமான சொத்துக்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்,.

இந்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அழகப்பன் மற்றும் அவரது மனைவியின் விசாலாட்சி உள்பட 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல நாட்களாக இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் இவர்களை தேடி வந்தனர். அதுமட்டுமின்றி அவர்களுடைய வீட்டில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில் அழகப்பன் தாக்கல் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் கேரள மாநிலம் திருச்சூரில் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இவர்களை அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வர முயற்சி செய்யப்பட்டு வருகிறது. நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் 6 பேரும் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இவனுக்கெல்லாம் எதுக்கு ஃபைவ் ஸ்டார்.. சொன்னது யாருன்னு விக்ரமிடம் போட்டு கொடுத்த உறவினர்..!

 விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் பெரிய அளவில்  போட்டியாளர்கள்

விவாகரத்து உறுதியாகிவிட்டதா? பிக்பாஸ் ரக்சிதாவின் பதிவால் பரபரப்பு..!

 பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரக்சிதா என்பதும் இவர் மிகவும் சிறப்பாக விளையாடி இறுதி கட்டத்தை நோக்கி சென்றார் என்பதும் தெரிந்ததே.

சூப்பர் ஸ்டார் என சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை? 'தங்கலான்' நடிகை கேள்வி..!

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்த நடிகை  சூப்பர் ஸ்டார் என்பதில் என்ன பெருமை இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

குறை சொல்பவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும் : வெள்ள மீட்பு பணி குறித்து நடிகர் வடிவேலு..!

 சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஆகியவற்றை

திடீரென இளையராஜாவை சந்தித்த பா ரஞ்சித்.. காதல் புத்தகம் பரிசு..!

இயக்குனர் பா ரஞ்சித் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இளையராஜாவை சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் இந்த சந்திப்பின்போது  அம்பேத்கர் அவர்களின் காதல் கடிதம்