பிரபல பாடலாசிரியர் இயக்கும் முதல் படத்தில் பிரசன்னா

  • IndiaGlitz, [Thursday,April 27 2017]

தனுஷ் நடித்த 'மரியான்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'நெஞ்சே எழு' என்ற பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த அற்புதமான பாடலை எழுதியவர் கவிஞர் குட்டிரேவதி. இவர் தற்போது இயக்குனராகி ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
சமீபத்தில் தனுஷின் ப.பாண்டி படத்தில் ராகவன் என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற பிரசன்னா தான், குட்டி ரேவதி இயக்கும் முதல் படத்தின் நாயகன். பிரசன்னா இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கின்றார்.
ஐபிஎஸ் முடித்துவிட்டு முதல் நாள் பணியில் சேரும்போது மிக முக்கிய வழக்கு ஒன்று சிக்குகிறது. அந்த வழக்கை பிரச்சன்னா எப்படி கையாள்கிறார் என்பதுதான் கதை. இந்த படத்தின் வசனத்தை பத்திரிகையாளர் பரிதியுடன் இணைந்து எழுதுகிறார் குட்டி ரேவதி. இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.