'பொதுநலன் கருதி' இயக்குனருக்கு பிரபல நடிகர் மிரட்டல்! 

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

கடந்த வாரம் வெளிவந்த 'பொதுநலன் கருதி' திரைப்படம் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இயக்குனர் சீயோனின் கதை சொல்லும் திறனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன்களில் நடிகர் கருணாகரன் கலந்து கொள்ளாதது குறித்து இயக்குனர் சீயோன் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இதற்கு கருணாகரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதில் கூறியதால் இந்த பிரச்சனை அத்துடன் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

ஆனால் இயக்குனர் சீயோன் மற்றும் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர்களை நடிகர் கருணாகரன் மிரட்டியதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் சீயோன் கூறியபோது, ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடும் பிரச்னைகளை சந்தித்தோம். இப்போது கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியில் கருணாகரனும் மிரட்டுகிறார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட உள்ளோம். சினிமா நலன் கருதி கருணாகரனுக்கு ரெட் கார்டு போட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கின்றோம்' என்று கூறினார்.

ஒரு புதுமுக இயக்குனரை தட்டி கொடுத்து ஆதரவாக நாலு வார்த்தை சொல்லாதது மட்டுமின்றி என் தயாரிப்பாளருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது கண்டிக்கத்தக்கது என்றும் இதற்காக கருணாகரன் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சீயோன் கூறியுள்ளார்.

இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த கருணாகரனை இந்த படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்து நல்ல பெயர் பெற்று கொடுத்த சீயோனை கருணாகரன் மிரட்டியுள்ளதை கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

More News

ரஜினி-முருகதாஸ் படத்தின் மெகா திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்தது. இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் அனைவரும் லாபம் பெற்று மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' சென்சார் தகவல்

ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' சமீபத்தில் வெளியாகி ஊடகங்களில் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

செளந்தர்யா திருமண நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளாதது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது

ஒரே படத்தில் பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் பார்த்திபன்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் அவருடைய சிஷ்யர் பாக்யராஜூம், அவருடைய சிஷ்யர் பார்த்திபனும் ஒரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'என்.ஜி.கே' டீசர் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட்

சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது